Tuesday, September 30, 2008

மழையும் நீயும்

உனக்கு மழை பிடிக்கும் என்றாய்

நானும் நனைந்து பார்த்தேன்

ஒரு மழை நாளில்...

மழையும்

உன்னைப் போல தான்

பட படவென தொடங்கி

சில்லென்று முடிகிறது.

உன்னுடன்


யாரோ உன் பெயர் சொல்லி

அழைக்கையில்

திரும்பிப் பார்க்கிறேன்

நீ அங்கு இல்லையென்று

தெரிந்தும் கூட


மிச்சம்


நீ அருந்திவிட்டு வைத்த

தேநீர் கோப்பையில்

மிச்சமிருக்கிறன

உன்

புன்னகை துளிகள்


காத்திருக்கும் பொழுதுகளில்


உனக்காக காத்திருக்கும்

பொழுதுகளில்

கவிதைகள் எழுதுகிறேன்

என்றாலும் கூட

நீ வந்த பிறகு தான்

அவைகள்

வாசிக்க தகுதியுடையதாகின்றன .